Napačna izbira? Nič za to! Izdelke lahko vrnete do 30 dni
Z darilnim bonom ne morete zgrešiti. Obdarovanec lahko v zameno za darilni bon izbere karkoli iz naše ponudbe.
Do 30 dni za vračilo
நான் சரவணன். ஜான் சரவணன். புனைபெயர் தந்த தேவன் புதிய கிருபைகளைத் தந்தார். எதையெதையோ தேடி ஓடிய வாழ்க்கை ஏசுவையேச் சுற்றி ஓடத்துவங்கிற்று. அடிபட்டுக் கன்றிப்போன மனங்களுக்கு மருந்திட 'ஆறுதலின் தேவன் ' ஊழியத்தைத் தந்து அடியேனை ஆசீர்வதித்தார். ஆயிரக்கணக்கான பாடல்கள், கதைகள் , நாடகங்களை எத்தனையோ பேருக்கு ஆறுதலாய் எழுதவைத்தார். உதவாத கழிவுப் பொருளாய் உலகத்தால் தூக்கி வீசப்பட்டவனை உயர்வான பொக்கிஷம்போல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டார். வறுமையும், நெருக்கடியும் குரல்வளையை இறுக்கும்போதும் பாடல்களும், கதைகளும் வெளியாகிக் கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்திட என் தேவன் புதிய வாசல்களைத் திறந்து கொடுத்தார். " நல்ல முத்து " எனது முதலாம் கதைத் தொகுப்பு. வசனத்தின் கொழுகொம்பில் படர்ந்த அழகான சிறுகதைகள். பல்லாயிரக் கணக்கான பேர்களின் கண்ணீர் துடைத்து, பாதை மாறிப் போனவர்களை மீண்டும் பரமனிடம் திருப்பி, இப்போது உங்கள் கரங்களை அலங்கரிக்க வந்திருக்கிறது.
இது உங்களோடு செல்லமாய்ப் பேசும். உரிமையுடன் தலையில் குட்டும். தோளில் சாய்த்துக் கொண்டு கண்ணீரைத் துடைக்கும்.... படியுங்கள். பலருக்கும் பரிசாகவும் கொடுங்கள். இன்னூலை அழகாய் வடிவமைத்து வெளியிட்டிருக்கும் " Notion Press " நிறுவனத்தாருக்கு மனதார நன்றி செலுத்தி அவர்களை ஏசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். மத்தேயு 10 : 42 கூறுகிறபடி இந்தச் சிறியவனுக்கு இவர்கள் செய்திருக்கும் உபகாரத்தின் பலனைக் கர்த்தர் நிறைவாய்த் தந்தருளுவாராக. ஜபங்களுடன், ஜான் சரவணன்.
Pozdravljeni! Sem Libroamiko, vaš knjižni svetovalec.
Kako vam lahko pomagam?